ஐபிஎல் போட்டிகளுக்கு பாதுகாப்பு வழங்க தயார் என்று குஜராத் முதல்வர் நரேந்திரமோடி கூறியுள்ளார்.
ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் (ஏப்ரல்) 10ந் தேதி முதல் மே 24ந் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் அந்த சமயத்தில் பாராளுமன்ற தேர்தலும் நடப்பதால் பாதுகாப்பு அளிப்பது கடினம் என்று மத்திய அரசு கூறி வருகிறது.
இதையடுத்து போட்டி அட்டவணையை மாற்றும்படி அறிவுறுத்தியது. ஆனால் 3 முறை மாற்றப்பட்டும் மத்திய உள்துறை அமைச்சகம் அதை ஏற்க இயலாது என்று கூறியது. இதை தொடர்ந்து இன்று நடந்த கிரிக்கெட் வாரிய கூட்டத்தில் ஐ.பி.எல். போட்டியை இந்தியாவில் இருந்து வெளிநாட்டுக்கு மாற்றுவது என்று முடிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் ஐபிஎல் போட்டிகளுக்கு பாதுகாப்பு வழங்க தயார் என்றும், இந்தியா போன்ற சக்தி வாய்ந்த நாடு பாதுகாப்பு தர முடியாதது வெட்கக்கேடு. காமன்வெல்த் போட்டிகளுக்கு மட்டும் பாதுகாப்பு தர முடியுமா? என்றும் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி கூறியுள்ளார். மேலும் நாட்டின் மானத்தை காப்பாற்ற குஜராத் அரசு ஐபிஎல் போட்டிக்கு பாதுகாப்பு தர முடிவு செய்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.