பிலிப்பைன்ஸை தாக்கிய வெப்பமண்டல புயல் – உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 70 ஆக அதிகரிப்பு !

கடுமையான வெப்பமண்டல புயல் பிலிப்பைன்ஸை தாக்கியதில் தென் மாகாணங்களில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 70ஐக் கடந்துள்ளது.

மேலும், 33 பேர் காயமடைந்துள்ளதாகவும், 14 பேர் காணாமல் போயுள்ளதாகவும் நாட்டின் பேரிடர் நிறுவனம் தெரிவித்துள்ளது. நிலச்சரிவுக்குப் பிறகு அடர்ந்த சேற்றில் இருந்து பல உடல்களை மீட்புக் குழுவினர் கண்டெடுத்தனர்.

மிண்டனாவ் தீவில் உள்ள மகுயின்டானாவ் மாகாணத்தில், ‘நல்கே’ புயல் மிகவும் அழிவை ஏற்படுத்தியது. கோடாபாடோ நகரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

வெப்பமண்டல புயல், மணிக்கு அதிகபட்சமாக 95கிமீ (59 மைல்) வேகத்தில் காற்று வீசுவதுடன், மணிக்கு 160கிமீ (99.4 மைல்) வேகத்தில் காற்று வீசியது, இது சனிக்கிழமை அதிகாலை கிழக்கு கேடன்டுவான்ஸ் மாகாணத்தில் கரையை கடந்தது.

தினமும் பலர் படகில் பயணம் செய்யும் தீவுக்கூட்டத்தின் பெரும்பகுதியில் படகு சேவையை கடலோர காவல்படை நிறுத்தியுள்ளது. கடலோர காவல்படையினர் பலரை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றி வருகின்றனர்.

வியாழக்கிழமை முதல் பலத்த மழை பெய்யத் தொடங்கியது, இந்த வார இறுதியில் புயல் அதன் உச்சத்தை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புயல் காரணமாக சில பாடசாலைகள் மூடப்படவும், பேருந்துகள் இயக்கப்படவும் வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

பிலிப்பைன்ஸ் பொதுவாக ஆண்டுக்கு 20 சூறாவளி அல்லது வெப்பமண்டல புயல்களை எதிர்கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *