தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் நால்வருக்கு 3 மாதகால விடுமுறைக்கு சபை நேற்று வியாழக்கிழமை அனுமதி வழங்கியுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான எஸ்.ஜெயானந்த மூர்த்தி, செல்வம் அடைக்கலநாதன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராஜா கஜேந்திரன் ஆகியோருக்கான விடுமுறைப் பிரேரணைகள் நேற்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன.
அக் கட்சியின் சக உறுப்பினர்களான ரி.கனகசபை, கே.பத்மநாதன், கே.துரைரட்ணசிங்கம், சொலமன், எஸ்.சிரில் ஆகியோர் முறையே மேற்குறித்த உறுப்பினர்களுக்கான விடுமுறையை பிரேரணைகளைச் சமர்ப்பித்து நேற்றைய தினம் (19.03.2009) தொடக்கம் 3 மாத காலத்துக்கு விடுமுறைகளுக்கான அனுமதியைக் கோரினர். இதனையடுத்து சபையினால் அதற்கான அனுமதி வழங்கப்பட்டது.
chandran.raja
எந்த நாட்டிலை அரசியல் தஞ்சம் கேட்பதாக உத்தேசம்?