ஆங் சான் சூகிக்கு 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை !

மியன்மாரில் இராணுவ ஆட்சி தொடர்ந்து கொண்டிருக்கிறது. அந்நாட்டின் முன்னாள் தலைவர் ஆங் சான் சூகி பதவி நீக்கம் செய்யப்பட்டு  ஏற்கனவே கைதாகியிருந்த நிலையில் அவரை விடுவிக்குமாறு கோரி போராடுவோர் மீது கடுமையான இராணுவபலம் பிரயோகிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது. சர்வதேசம் இந்த பிரச்சினைகள் தொடர்பில் பெரிதாக அலட்டிக்கொள்ளாது இருக்கும் நிலையில் இராணுவ ஆதிக்கம் இன்னும் அங்கு உறுதிசெய்யப்பட்டு வருகின்றது.

பதவி நீக்கம் செய்யப்பட்ட மியான்மரின் தலைவர் ஆங் சான் சூகிக்கு அந்நாட்டு நீதிமன்றம் மீண்டும் ஒருமுறை தண்டனை விதித்துள்ளது.

அவர் ஏற்கனவே 11 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் நிலையில், நீதிமன்றத்தின் புதிய உத்தரவின்படி மேலும் 6 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இன்று (15) வழங்கப்பட்ட நீதிமன்றத் தீர்ப்பின்படி, அவர் ஊழல் வழக்கில் குற்றவாளியாகக் இனங்காணப்பட்டுள்ளார். 77 வயதான ஆங் சான் சூகி அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்துள்ளதுடன் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாக அவரது வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *