பட்டினி அபாயம் நிறைந்த ஆபிரிக்கா நோக்கி பயணமானது உக்ரைனின் தானியக்கப்பல் !

பட்டினி அபாயம் அதிகம் நிறைந்த ஆபிரிக்கப் பிராந்தியத்துக்கு உக்ரைன் தானியங்களை எடுத்துச் செல்வதற்காக, அந்த நாட்டை நோக்கி முதல் சரக்குக் கப்பல் புறப்பட்டுள்ளது.

உக்ரைன் போரால் ஆபிரிக்கப் பிராந்தியத்தில் கோடிக்கணக்கானவர்கள் பட்டினியால் அவதியுறும் அபாயம் இருப்பதாக அஞ்சப்பட்ட நிலையில், ரஷ்யா – உக்ரைன் தானிய ஒப்பந்தத்தின் கீழ் ஆபிரிக்கப் பிராந்தியத்தைச் சேர்ந்த எத்தியோப்பாவுக்கு உக்ரைனிலிருந்து கோதுமை எடுத்துச் செல்வதற்காக சரக்குக் கப்பல் ஒன்று முதல்முறையாக அந்த நாட்டை நோக்கி நேற்று (வெள்ளிக்கிழமை) புறப்பட்டது.

பொருளாதாரத்தில் பின்தங்கிய நாடுகளில் பசிப் பிணியைப் போக்குவதற்காக ஐ.நா.வின் உலக உணவு திட்டத்தின் கீழ் அந்தக் கப்பல் உக்ரைனை நோக்கி புறப்பட்டதாக ஐரோப்பிய சபையின் தலைவர் சார்லஸ் மிஷெல் தெரிவித்தார்.

உக்ரைன் போரால் உலகில் 4.7 கோடி பேர் பசியால் வாடும் அபாயம் இருப்பதாக ஐ.நா. எச்சரித்தது. அதையடுத்து, உக்ரைனிலிருந்து தானியக் கப்பல்களை கருங்கடல் வழியாக வெளிநாடுகளுக்கு அனுப்ப வழிவகை செய்யும் கண்ணாடி ஒப்பந்தம், ரஷ்யா, உக்ரைன் இடையே ஐ.நா. மற்றும் துருக்கி முன்னிலையில் கடந்த மாதம் கையொப்பமானமை குறிப்பிடத்தக்கது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *