இலங்கைக்கு சர்வதேசசமூகம் உதவி வழங்கும் நடவடிக்கைகளிற்கு பிரிட்டன் தலைமை தாங்கவேண்டும் என பிரிட்டனின் ஓய்வுபெற்ற இராஜதந்திரி பீட்டர் ஹீப் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கார்டியனில் வெளியிட்டுள்ள கடிதத்தில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இலங்கை நெருக்கடிக்கான பிரிட்டிஸ் அரசாங்கத்தில் பதில் நடவடிக்கை வெட்கக்கேடானது. மக்கள் பட்டினியால் அவதியுறுகின்றனர். மருந்துகள் இன்மையால் உயிரிழக்கின்றனர்.
போதியளவு பெற்றோல் இல்லாததால் அவர்கள் வேலைக்கு செல்ல முடியாத நிலையில் உள்ளனர். மின்சார தட்டுப்பாடு காணப்படுகின்றது.
அவர்கள் எவ்வாறு இந்த நிலைக்கு தள்ளப்பட்டனர் என்பதற்கு அப்பால் ( ராஜபக்சாக்களின் மோசமான ஆட்சி,30 வருட கிளர்ச்சியால் நாடு சிதைவடைந்ததன் பாரம்பரியம்) நெருக்கடி நிலையில் உள்ள இன்னொரு பொதுநலவாய நாட்டிற்கு உதவும் விடயத்திற்கு பிரிட்டன் தலைமை வகிக்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். (நாங்கள் அவர்களின் விருப்பமின்றி அவர்களை 150 வருடங்களிற்கு மேல் ஆட்சி செய்தோம் என்பதை கருத்தில்கொள்ளவில்லை, அதற்காக நாங்கள் ஏதாவது கைமாறு செய்யவேண்டும்)
நாங்கள் மிக வேகமாக சர்வதேச நிவாரணமுயற்சியொன்றிற்கு தலைமை தாங்கவேண்டும், பொதுநலவாயத்தின் ஊடாக அதனை செய்யலாம், என அவர் தெரிவித்துள்ளார்.