பொருளாதார நெருக்கடியிலும் முழுமையாக விற்றுத்தீர்ந்த கிரிக்கெட் போட்டிக்கான நுழைவுச்சீட்டு – இலங்கையில் யாருக்கு பொருளாதார நெருக்கடி..?

சுற்றுலா அவுஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையில் இடம்பெறவுள்ள முதல் இரண்டு ரி20 போட்டிகளுக்குமாறு அனைத்து நுழைவுச் சீட்டுக்களும் விற்றுத் தீர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை கிரிக்கெட் நிறுவனம் இதனை தெரிவித்துள்ளது.

இன்று பிற்பகல் மூன்று மணியளவில் இரண்டு போட்டிகளுக்குமான அனைத்து நுழைவுச் சீட்டுக்களும் விற்றுத் தீர்ந்துள்ளதாக அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதலாவது ரி20 போட்டி எதிவரும் 7 ஆம் திகதியும், இரண்டாவது ரி20 போட்டி 9 ஆம் திகதியும் கொழும்பு ஆர் பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
…………………………………………………………………….
இலங்கையில் ஒரு பக்கமாக பொருளாதார நெருக்கடி – மக்கள் ஒரு நேர உணவுக்கு கஷ்டப்படகிறார்கள் என ஒரு பக்கத்தால் பேசப்பட்டுக்கொண்டிருந்தாலும் கூட இவ்வாறு எல்லா டிக்கெட்டுக்களும் விற்கப்பட்டுள்ள தன்மையானது எல்லோருக்குமே உண்மையாக பொருளாதார நெருக்கடியா..? என்ற கேள்வியையும் ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் கே.ஜி.எப், பீஸ்ட் எனும் எனும் தென்னிந்திய திரைப்படங்கள்  வெளியாகியிருந்த போது வடக்கு – கிழக்கில் கூட்டம் குவிந்திருந்ததது. அப்படியான ஒரு கூட்டம் அலைமோதியது.

பெற்றோல் செட்களில் கூட்டமாக நிற்பதையும் – எரிவாயுவுக்காக வரிசையில் நிற்பதையும் வைத்து இலங்கையில் பொருளாதார நெருக்கடி என சாதாரணமாக கடந்து விடுகிறோம். உண்மையில் இந்த பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டிருப்பது மத்தியதரவர்க்க குடும்பங்கள் அல்ல. மத்திய தர வர்க்கத்தை சேர்ந்த சொற்பமான குடும்பங்களும்  அதிகமான சாதாரண – ஏழைக்குடும்பங்களுமே அதிகம் இந்த பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த மக்களையே அரசாங்கம் அடையாளம் கண்டு வறுமையை போக்க உதவி செய்ய வேண்டும்.

 

அப்படியானால் போராடுவது யார்..? மூன்று வேளையும் உணவு கிடைக்கும் என்ற நம்பிக்கை உடைய குடும்ப பின்னணி உள்ளவர்களும் – அரசியல் ஆதாயம் தேட நினைக்கும் குழுக்களுமே போராட்ட களத்தில் உள்ளன.

 

தினசரி வேலைக்கு சென்றால் மட்டுமே சாதாரண ஏழை குடும்பங்களின் வீடுகளில் அடுப்பு எரியும். இந்த மக்களை நோக்கியே ஊடகங்களின் பார்வையும் திரும்ப வேண்டும். இந்த பொருளாதார நெருக்கடியால் தினம் தினம் அழுது வாடிக்கொண்டிருப்பது இந்த ஏழைக்குடும்பங்களே. இவர்களை திருப்திப்படுத்த நடவடிக்கை எடுக்காது சமூக வலைத்தளங்களிலும் – காலி முக்த்திடலிலும் போராடிக்கொண்டிருப்போரை திருப்பதிப்படுத்த அரசாங்கம் பாடுபட்டுக்கொண்டிருக்கிறது.

அடித்தட்டு மக்களின் தேவைகள் பூர்த்தி செய்யப்படும்வரை ஒரு நாட்டின் அபிவிருத்தி சுட்டி சுழியமாகவே இருக்கும் – இந்த நிலையே தொடரும்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *