யாழ்குடா நாட்டிற்கு ஏ 9 வீதியூடாக அனுப்பிவைக்கப்பட்டுள்ள அத்தியாவசிய உணவுப்பொருட்கள் அடங்கிய லொறிகள் நாளைய தினம் யாழ் குடாநாட்டிற்கு வந்து சேருமென யாழ் அரசாங்க அதிபர் கே.கணேஷ் தெரிவித்தார்.
இன்று திங்கட்கிழமை இவ் லொறிகள் கொழும்பிலிருந்து சென்றுள்ளதாகவும், அவை நாளைய தினம் யாழ் குடாநாட்டை வந்தடையுமெனவும் அவர் தெரிவித்தார். 24 வருடங்களின் பின்னர் ஏ9 வீதியூடாக இன்று கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு உணவு பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது..