‘உக்ரைன் குடிமக்களுக்கு எதிராக ரஷியா நடத்திய போர் இனப் படுகொலை’ – பைடன் சாடல்!

உக்ரைன் பத்திரிகையாளர்களை ரஷ்யா சிறை வைத்துள்ளது என உக்ரைன் துணை பிரதமர் இரினா வெரேஸ்சுக் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில், உக்ரைன் பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வலர்கள், அரசியலமைப்பு நிர்வாகிகள், குடிமக்கள் உள்ளிட்ட பலரை ரஷ்ய அரசு சிறைகளில் அடைத்து உள்ளது என தெரிவித்தார்.
ரஷியாவின் கிழக்குப் பகுதியில் உள்ள வேஸ்டாக்னி விண்வெளி ஏவுதள மையத்திற்கு சென்ற ரஷ்ய ஜனாதிபதி புடின் நிருபர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில், ரஷியாவை உலகின் எந்த சக்தியாலும் தனிமைப்படுத்த முடியாது. இன்றைய சூழலில், யாரையும் எந்த ஒரு நாடும் தனிமைப்படுத்துவது என்பது நிச்சயமாக சாத்தியம் இல்லாத ஒன்று. எங்களுடன் ஒத்துழைப்புடன் செயல்பட விரும்பும் நட்பு நாடுகளுடன் நாங்கள் பணியாற்றுவோம் என தெரிவித்தார்.
இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் முதன் முறையாக உக்ரைனில் ரஷியாவின் படையெடுப்பை இனப்படுகொலை என குறிப்பிட்டார்.
இதுதொடர்பாக அதிபர் ஜோ பைடன் கூறுகையில், உக்ரைன் குடிமக்களுக்கு எதிராக ரஷியா நடத்திய போர் இனப் படுகொலை என தெரிவித்தார்.
மேலும் ரஷ்ய அதிபர் புடின் உக்ரைனியர் என்ற எண்ணத்தைக்கூட அழிக்க முயற்சிக்கிறார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *