இலங்கை மற்றும் அவுஸ்ரேலிய அணிக்களுக்கிடையிலான முதலாவது இருபதுக்கு இருபது போட்டி இடம்பெற்ற மைதானத்திற்கு அருகில் புலம்பெயர் தமிழர்கள் சிலரினால் போராட்டம் ஒன்றும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அவர்கள் சிட்னி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தின் நுழைவாயிலுக்கு முன்பாக சுவரொட்டிகள் மற்றும் பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டதாக அவுஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கிரிக்கெட் போட்டிகளை விளையாடி மகிழ்ந்தாலும், கடந்த காலங்களில் தமிழர்கள் மீது நடத்தப்பட்ட படுகொலைகளை மறந்துவிட முடியாது என அவர்கள் குறிப்பிட்டதாகவும் அவுஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.