இந்தியாவின் பல பகுதிகளிலும் முஸ்லீம் பெண்களின் ஆடை தொடர்பான விவகாரம் பெரிய பிரச்சினையாக உருமாறியுள்ள நிலையில் அண்மையில் திருகோணமலையிலுள்ள சன்முகா இந்துக்கல்லூரியிலும் ஹபாயா ஆடை ஆணிந்து வந்த ஆசிரியருக்கு எதிராக பாடசாலை சமூகத்தினர் சில போராட்டங்களை முன்னெடுத்ததால் ஆடை விவகாரம் பெரிய பேசுபொருளாகியிருந்தது. இந்த விவகாரத்தை பயன்படுத்தி பலர் அரசியல் லாபம் தேட முனைவதாக கிழக்கு நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் சாடியிருந்தார். மேலும் இது தொடர்பான இணைய – சமூக வலைத்தள வழி சண்டைகளும் ஓய்ந்தபாடில்லை.
இந்த நிலையில் கல்முனையை சேர்ந்த மௌலவியும், அரசியல்வாதியுமான முபாரக் அப்துல் மஜீத் என்பவர் தமிழ் பெண்களின் ஆடை தொடர்பில் புதிய சர்ச்சைக்கருத்துக்களை தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர்,
“இப்பொழுது சேலை என்பது இரண்டு துணியாக மாறிவிட்டது. பின்னால் ஜன்னல் வைத்து கொள்கின்றார்கள். முன்னால் வீ வடிவில் வெட்டி விடுகின்றார்கள். இடுப்பினை காட்டுகின்ற சேலை வரை நாம் காண்கின்றோம். ஆகவே இப்பொழுது இருக்கின்ற சேலை என்பது விழுமியமுள்ள ஆடையாக நாம் பார்க்கவில்லை. சேலை அணியத்தான் வேண்டும். சேலை என்பது எத்தனை முழம் என்பது எமக்கு தெரியும்.
முன்னைய கால நாடகங்கள் நாவல்களில் சேலையுடன் வருகின்ற பெண்கள் விழுமியங்களை பாதுகாப்பவர்களாகவே இருக்கின்றனர். ஆனால் தற்போது உள்ள சேலை ஒழுக்கமில்லாதது.“ எனக் குறிப்பிட்டிருந்தார்.
இவ்வாறு மௌலவி முபாரக் அப்துல் மஜீத் விமர்சித்துள்ளமையானது இந்த இரண்டு இனக்குழுமங்களிடையேயும் இன்னும் மனக்கசப்பை ஏற்படுத்துமே தவிர பிரச்சினைகளை முடித்து வைக்காது என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.
இலங்கை இந்தியா உள்ளிட்ட சில நாடுகளை தவிர உலகின் வேறு எந்த பகுதிகளிலும் இந்த ஆடை தொடர்பான விவாதங்கள் இவ்வளவு பெரிய சர்ச்சையாக உருவெடுப்பதில்லை. எவ்வளவு காலமாக ஒரே நாட்டில் வாழ்ந்தும் கூட இன்னொருவருடைய கலாச்சாரத்தை மதிக்க தெரியாதவர்களாகவே நம்மில் பலர் காணப்படுகின்றனர். ஆடை, மதம், உணவு தெரிவு, என்பன அவரவர் விருப்பம் சார்ந்தது. அதை அவரவரிடமே விட்டுவிடுவது பொருத்தமானது. அதை விடுத்து விட்டு கலாச்சாரத்தை காப்பாற்றுகிறோம் என்ற போர்வையில் அடுத்தவர்களிடம் நமது கலாச்சாரத்தை திணிப்பதும் – அடுத்தவர் கலாச்சாரத்தை நகைப்பபுக்குள்ளாக்குவதும் எமது நிலையை நாமே தரங்கெடுத்தி கொள்வதாகும்.
திருகோணமலையிலுள்ள சன்முகா இந்துக்கல்லூரியில் முஸ்லீம் ஆசிரியையின் ஆடை விவகாரம் அது ஆசிரியர்களிடையேயே கலந்துரையாடி ஒரு முடிவுக்கு கொண்டு வரப்படம்டிருக்க வேண்டிய விவகாரம். இதில் ஆசிரியரும் அதிபரும் சிறு பிளை்ளைகள் போல சண்டையிட்டு மாவர்களிடையேயும் வன்முறைக்கலாச்சாரத்தை ஊக்குவித்துள்ளனர். இது போக முஸ்லீம் ஆசிரியையின் ஆடையை கண்டித்து ஆசிரியர்கள் செய்த போராட்டத்துக்கு எதுவுமே அறியாத பாடசாலையின் நூற்றுக்கணக்கான மாணவிகளையும் அழைத்து – வீதிக்கு கொண்டு வந்து போராட்டம் நடத்தி முடிக்கும் அளவுக்கு அப்பாடசாலை ஆசிரியர்களின் கல்வி நிலை தரங்கெட்டு போய்விட்டது என்பதே உண்மை நிலை.
ஆடை விடயம் என்பது அவரவர் உரிமை. இது தொடர்பில் போராடுவதே பெரிய அபத்தமானது. இந்த போராட்டது்துக்கு எதுவுமே அறியாத மாணவர்களையும் தெருவுக்கு அழைத்து போராட வைத்தததன் மூலம் அவர்களிடையேயும் பிரிவினைவாத – மதம் தொடர்பான காழ்ப்புணர்ச்சிகளை கட்டவிழ்த்து விட்டுள்ளார்கள் என்பதே உண்மை. தமிழ் – முஸ்லீம் சமூகத்தினர் இணைந்து அதிகமாக வாழும் கிழக்கிலங்கை பகுதியில் இனங்களுக்கிடையிலான புரிதலை வளர்த்து சமூக முன்னேற்றத்தையுமு் – சமத்துவத்தையும் கற்பிக்க வேண்டிய பாடசாலைகளில் இப்படியான செயற்பாடுகள் இடம்பெறுவது அருவருக்கத்தக்து.
இந்த பிரச்சினையான நேரங்களில் அரசியல்வாதிகளும் – சமூக வலைத்தளவாசிகளும் எடுத்த வேகத்தில் வன்முறைத்தனமான கருத்துக்களை கக்காது பொறுமையோடு விடயங்களை அணுக வேண்டும். சாதாரணமாக எல்லோர் கைகளிலும் தெலைபேசி புழக்கத்துக்கு வந்துள்ள இந்த காலகட்“டத்தில் மதம் தொடர்பிலும் – இன்னொரு இனம் தொடர்பிலும் – அவர்களுடைய ஆடை பழக்கவழக்ககங்கள் தொடர்பிலும் முன்னுக்கு பின் முரணான கருத்துக்களை முன்வைத்து சமூக வலைத்தளங்களில் தொடர் சண்டைகள் அரங்கேறிக்கொண்டிருக்கின்றன. 15 வயது தாண்டிய பாடசாலை மாணவர்கள் கூட சமூக வலைத்தளங்களை பாவிக்க ஆரம்பித்துள்ள இந்தக்கால கட்டங்களில் உங்களுடைய வன்மமான – வன்முறையான கருத்துக்கள் எதிர்கால தலைமுறையினரையும் சீழித்து விட்டுவிடும். முக்கியமாக இந்த பிர்சிசனைகளுக்கு தூபமிடாது முளையியேலயே அரசியல்வாதிகள் கிள்ளி எரிய முழுமனதுடன் முன்வர வேண்டும். தங்களது சுயநல அரசியலை விடுத்து தமிழரும் – மூஸ்லீம்களும் ஒரே மக்களே என்ற கண்ணோட்டத்துடன் இணைந்து செயலாற்ற வேண்டியது காலத்தின் மிகப்பெரிய கட்டாயமாகும்.
பெரும்பாண்மை இனத்தவர்களான சிங்கள அரசியல்வாதிகளின் அடக்குமுறைகளுக்கு எதிராக குரல்கொடுத்து – தொடர்ந்து போராடிக்கொண்டிருக்கும் தமிழர் – முஸ்லீம்களிடையே முறையான புரிதல் ஏற்பட்டு ஒற்றுமை வளர்க்கப்படவேண்டியது காலத்தின் கட்டயாயமாகும். அப்போது மட்டுமே ஓரளவான உரிமைகளை சரி பெரும்பான்மை அரசிடமிருந்து பெற்றுக்கொள்ள முடியும் என்பதை தமிழ் – முஸ்லீம்“ தலைமைகளும் – மக்களும் புரிந்து கொண்டு செயற்பட வேண்டும்.