இலங்கை இராணுவத்தால் நிகழ்த்தப்பட்ட பாலியல் வன்முறைகள் மற்றும் சித்திரவதைகள் – விசேட அவதானம் செலுத்தும் பிரித்தானியா !

இலங்கையில் படையினரால், பாதுகாப்பு தரப்பினரால் நிகழ்த்தப்பட்ட பாலியல் வன்முறைகள் மற்றும் சித்திரவதைகள் குறித்து முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக விசேட அவதானம் செலுத்தப்படுவதாக பிரித்தானிய அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன் , இலங்கையில் மனித உரிமைகள் மற்றும் பொறுப்புக்கூறல் நிலைவரத்தைக் கண்காணிப்பதற்காக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளுக்குத் தொடர்ந்து பிரித்தானியா ஆதரவு வழங்குவதாகவும் தெரிவித்துள்ளது.

பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் டொனியா அன்டோனியஸியினால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலகத்திற்குப் பொறுப்பான அமைச்சர் அமன்டா மில்லிங், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46 கீழ் ஒன்று தீர்மானத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள கடப்பாடுகள் நிறைவேற்றப்படவேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *