பெல்மதுளை நீதிமன்றத்தில் தீ ; ஆவணங்கள் எரிந்து நாசம்

பெல்மதுளை மஜிஸ்திரேட் நீதவான் நீதிமன்றத்தில் நேற்று இடம்பெற்ற தீ விபத்தில் அங்குள்ள கோவைகள், முக்கிய ஆவணங்கள் எரிந்து சாம்பராகியுள்ளன. இச்சம்பவம் நேற்றுக்காலை இடம் பெற்றிருக்கலாமென விசாரணைகளை மேற்கொண்டுள்ள காவத்தை பொலிஸார் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.

கடந்த வெள்ளிக்கிழமை கடமைகள் முடித்து காரியாலயம் அனைத்தும் முறையாக மூடப்பட்டு சென்று நேற்றுக் காலை கடமைக்கு திரும்பிய போது நீதிமன்றக் காரியாலயம் உடைக்கப்பட்டு அதிலுள்ள சில முக்கியமான ஆவணங்கள் கோவைகள் தீயிட்டு கொளுத்தப்பட்டுள்ளதாக ஊழியர்கள் காவத்தை பொலிஸாருக்கு தெரிவித்தைத் தொடர்ந்து பொலிஸார் விசாரணைகளை ஸ்தலத்திற்கு சென்று மேற்கொண்டு வருகின்றனர்.

சில கோவைகள் களவாடப்பட்டிருக்கலாமென தெரிவிக்கும் பொலிஸார் அங்குள்ள அலுமாரிகள் உடைக்கப்பட்டுள்ளதுடன் அங்கிருந்த ஒரு லட்சம் ரூபா ரொக்கப்பணமும் களவாடப்பட்டுள்ளதாக தெரிவிகின்றனர்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *