கிழக்கு மாகாணத்தில் கடந்த சில தினங்களாக கடும் உஷ்ணமான காலநிலை நிலவுகின்றது. பகல் வேளைகளில் கடும் வெயிலுடன் கூடிய வெப்ப மான காலநிலை நிலவுவ துடன் இரவு வேளைகளிலும் கடும் உஷ்ணம் நிலவுவதாக கூறப்படுகின்றது.
இந்த வெப்ப நிலை அதிகரிப்பு காரணமாக குழந்தைகள் பல்வேறு பாதிப்புக்களை எதிர்நோக்கி வருகின்றனர். போதிய காற்றோட்ட வசதிகளற்ற வீடுகளில் வசித்து வரும் வறிய மக்களும், அடிப்படை வசதிகள் வழங்கப்படாத நிலையில் மீளக் குடியமர்த்தப்பட்டுள்ள மக்களும் உஷ்ணமான காலநிலையினால் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.