மோதலை இடைநிறுத்தி பொது மக்கள் பாதுகாப்புடன் வெளியேறுவதற்கு இடமளிக்குமாறு ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கி மூன் இலங்கை அரசாங்கத்தையும் விடுதலைப்புலிகளையும் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். தேவையற்ற விதத்தில் பொது மக்களுக்கு மேலும் இழப்புகளையும் இலங்கை சமூகத்திற்கு அழிவையும் ஏற்படுத்தாமல் இந்த மோதலை முடிவுக்கு கொண்டு வர வேண்டிய அவசியத் தேவை இருப்பதாக ஐ.நா.வில் நிருபர்கள் மத்தியில் பான் கி மூன் தெரிவித்திருக்கிறார்.
மோதல் அதிகரித்திருப்பதால் அங்கு அகப்பட்டிருக்கும் பொது மக்களின் இறப்புகள் அதிகரித்து வருவதையிட்டு ஐ.நா. கவலையடைந்துள்ளது. மோதல் பகுதியிலிருந்து வெளியேற முயற்சிக்கும் பொது மக்கள் பாதுகாப்பாக வெளியேற இடமளிப்பதற்காக யுத்தத்தை இடைநிறுத்துவதற்கு ஐ.நா. ஆதரவளிக்கின்றது என்று பான் கி மூன் கூறியுள்ளார்.
யுத்த நிறுத்தம் என்ற வார்த்தையை ஐ.நா. செயலாளர் நாயகம் பயன்படுத்தவில்லை. ஆனால், பொது மக்களைப் பாதுகாக்குமாறு மோதலில் ஈடுபடும் இரு தரப்பினரையும் வலியுறுத்தி முன்னர் அவர் விடுத்த அறிக்கைகளிலும் பார்க்க அவர் இப்போது தெரிவித்துள்ள கருத்துக்கள் அதிகமானதாக இருப்பதாக ராய்ட்டர் செய்திச் சேவை குறிப்பிட்டுள்ளது. “சகல தரப்பினரும் மோதலை முடிவுக்கு கொண்டு வருவதற்கான அரசியல் பேச்சுவார்த்தையை முன்னெடுக்க வேண்டும்’ என்ற தனது அழைப்பை மீண்டும் ஐ.நா. விடுப்பதாக பான் கி மூன் தெரிவித்துள்ளார