முல்லைத் தீவிலிருந்து கப்பல் மூலம் திருகோணமலைக்குக் கூட்டிவரப்பட்ட காயமடைந்த பொதுமக்களில் பெப்ரவரி 11 ஆம் திகதி முதல் பெப்ரவரி 23 ஆம் திகதி வரை 11 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அவர்களில் இருவர் கண்டி போதனா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்தனர் என்றும் மாகாண சுகாதார அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்தன.
திருகோணமலை ஆஸ்பத்திரியில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று திங்கட்கிழமை ஒருவர் உயிரிழந்தார். இதேவேளை, திருகோணமலையிலிருந்து வவுனியாவில் உள்ள இடம்பெயர்ந்தோருக்கான நலன்புரி முகாம்களுக்கு அனுப்பப்பட்டோரின் எண்ணிக்கை 63 ஆக அதிகரித்துள்ளது. பெப்ரவரி 11 முதல் நான்கு தடவைகளாக கப்பல் மூலம் முல்லைத்தீவிலிருந்து திருகோணமலைக்கு கூட்டிவரப்பட்டோரில் 1,110 பேர் திருகோணமலையிலிருந்து வெளிமாவட்டங்களில் உள்ள ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். திருகோணமலை ஆஸ்பத்திரியில் 500 பேரும் திருகோணமலை மெதடிஸ்த மகளிர் கல்லூரியில் 21 பேருமே தங்கவைக்கப்பட்டுள்ளனர். திருகோணமலை ஆஸ்பத்திரியில் வைத்து அறுவைச் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டோரின் எண்ணிக்கை 717 ஆக அதிகரித்துள்ளது. இதன் விபரம் வருமாறு;
பெப்ரவரி 1 தொடக்கம் பெப்ரவரி 19 வரை 500 பேர், பெப்ரவரி 20 – 28 பேர் , பெப்ரவரி 21-45 பேர், பெப்ரவரி 22-11 பேர் , பெப்ரவரி 23 -33 பேர். வெளிமாவட்டங்களில் உள்ள ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டோரின் பிந்திய நிலைவரம் வருமாறு;
கொழும்பு / கண்டி 68 பேர் , பொலனறுவை 171 பேர், கந்தளாய் 160 பேர், தம்பலகமம் 76 பேர்.