இந்திய மருத்துவர்களை அனுப்புமாறு கருணாநிதி கோருகிறார்

karunanithy.jpgதமிழக முதல்வர் கருணாநிதி, இலங்கையில் தற்போது நடைபெற்றுவரும் மோதலின் காரணமாக பாதிக்கப்பட்டிருக்கும் ஆயிரக்கணக்கான தமிழர்களுக்கு மருத்துவ உதவி அளிக்க இந்தியாவிலிருந்து மருத்துவர்கள் போர் பிரதேசத்திற்குச் செல்லவேண்டும் என்றும், தமிழகமும் அவ்வாறு மருத்துவர்களை அனுப்பத் தயார் என்றும் கூறி இருக்கிறார்.

இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு அவர் இன்று எழுதி உள்ள கடிதத்தில், ”கடந்த ஜனவரி 15ஆம் நாளிலிருந்து இதுவரை 36,000 தமிழர்கள் இராணுவக்கட்டுப்பாட்டிற்கு வந்து, அவர்களெல்லாம் தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருக்கின்றனர், பலர் காயமுற்றிருக்கின்றனர், மற்றவர் உடல்நலக்குறைவுற்றிருக்கின்றனர். தற்போது போர் பிராந்தியத்தில் சிக்கியுள்ள 1 லட்சம் மக்களில் மேலும் பலர் வெளியேறக்கூடும் என பல்வேறு வெளிநாட்டு அமைப்புக்கள் கூறி இருக்கின்றன, இந்நிலையில் பாதிக்கப்பட்டோருக்கு அவசர மருத்துவ சிகிச்சை அளிக்கப்படவேண்டும், எனவே மத்திய அரசு உடனடியாக இலங்கையுடன் தொடர்புகொண்டு இந்தியாவிலிருந்து தேவையான மருத்துவர்கள், உதவியாளர்கள் மற்றும் மருந்துகள் பாதிக்கப்பட்ட இலங்கைத் தமிழரை சென்றடைய ஆவன செய்யவேண்டும்” என்று பாக்ஸ் மூலம் பிரதமருக்கு முதல்வர் கருணாநிதி கோரி இருக்கிறார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *