வன்னியில் கைப்பற்றப்பட்ட பகுதிகளில் அதிரடிப்படையின் 25 முகாம்கள் – பிரதிப் பொலிஸ்மா அதிபர் சரத்சந்திர தெரிவிப்பு

sri-lanka-police.jpgவன்னியில் இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்ட பகுதிகளில் விசேட அதிரடிப் படையின் 25 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பாக விசேட அதிரடிப் படையின் கட்டளை அதிகாரியும் பிரதிப்பொலிஸ்மா அதிபருமான கே.எம்.எல். சரத்சந்திர கூறுகையில்;

தற்போது வன்னியில் 24 பிரதான முகாம்கள் உட்பட 25 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. “ஏ9′ வீதியில் ஓமந்தை முதல் மாங்குளம் வரை முகாம்களும், ஓமந்தை முதல் மணலாறு வரை 8 முகாம்களும், வவுனியா பூந்தோட்டப் பகுதியில் 8 முகாம்களும் , கனகராஜன் குளம் நெடுங்கேணி வீதியில் உப முகாமொன்றும் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இந்தப் பகுதியில் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடும் இவர்கள் இங்கு இராணுவத்தினரின் நடவடிக்கைகளுக்கும் உதவி வருவதாகவும் தெரிவித்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *