கேபிள் தொலைக்காட்சி நிலையத்தைச் சேர்ந்த 4 பேர் படையினரால் கைது

vavuniya-tv.jpgவவுனியா வைரவபுளியங்குளம் பகுதியில் நடத்தப்பட்டு வந்த சன் ரீவி மீள் ஒளிபரப்புத் தொலைக்காட்சி நிலையத்தைச் சேர்ந்த 4 பேர் திங்களன்று இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு, பொலிசாரிடம் மேல் விசாரணைக்காகக் கையளிக்கப்பட்டுள்ளனர். உரிய அனுமதிப்பத்திரமின்றி தொலைக்காட்சி நிலையம் நடத்தி வந்தமைக்காகவே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையத்திற்குச் சென்ற இராணுவத்தினர் அந்த நிலையத்திற்குப் பொறுப்பாக இருந்தவர் உட்பட நான்கு பேரைக் கைது செய்ததுடன், தொலைக்காட்சி ஒளிபரப்பிற்குப் பயன்படுத்தப்பட்டு வந்த உபகரணங்களையும் கைது செய்யப்பட்டவர்களுடன் விசாரணைகளுக்காகக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தோனிப்பிள்ளை மரியசீலன் (40), ஜெய்கிஷ் (45). அன்ரனி (40), புரூஸ் (38) ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்கள் வவுனியா பொலிசாரினால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *