இலங்கைப்பிரச்சினையை ஐ.நா.வுக்கு கொண்டு செல்ல இந்திய அரசுக்கு பா.ம.க. இருநாள் கால அவகாசம்

drramadoss.jpgஇலங்கை விவகாரத்தை ஐ.நா.வுக்கு கொண்டு செல்வதற்காக இந்திய மத்திய அரசாங்கத்துக்கு இருநாள் கால அவகாசம் வழங்கியிருப்பதாக அரசின் பங்காளிக்கட்சியான பாட்டாளி மக்கள் கட்சி திங்கட்கிழமை தெரிவித்துள்ளது.  இது தொடர்பாக முக்கிய தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்த நேற்று புதுடில்லிக்கு பயணமாகவிருப்பதாக பா.ம.க.வின் நிறுவுநர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்திருக்கிறார்.

போர் நிறுத்தம் செய்வதற்கு இலங்கை அரசை இந்தியா நிர்ப்பந்திக்க வேண்டும் என்றும், உடனடியாக இந்த பிரச்சினையை ஐ.நா.மன்றத்திற்கு கொண்டு சென்று இலங்கையில் அமைதி ஏற்பட மத்திய அரசு முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்றும் ராமதாஸ் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் டி.சுதர்சனம் ராமதாசை சந்தித்து இந்த சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களிடம் டி.சுதர்சனம் கூறியதாவது;

இலங்கைத் தமிழர்களை பாதுகாப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பல்வேறு விஷயங்களை நாங்கள் பேசினோம். பா.ம.க.வை பொறுத்தவரை மத்தியில் உள்ள காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் தான் இன்னும் உள்ளது. எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலிலும் இந்த கூட்டணி அப்படியே நீடிக்க வேண்டும் என்பது எங்களுடைய விருப்பம். தமிழ்நாட்டில் தி.மு.க.கூட்டணியில் பா.ம.க.தொடர்ந்து நீடிப்பது குறித்து அவர்களிடம் தான் கேட்க வேண்டும்.

இலங்கை தமிழர் பிரச்சினையை பொறுத்தவரை நேரு, இந்திரா, ராஜீவ் ஆகிய தலைவர்கள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு தீர்வு ஏற்படுவதற்கு பாடுபட்டு இருக்கிறார்கள். எனவே காங்கிரசுக்கு எதிரான மனப்போக்கு வரும் தேர்தலில் மக்களிடம் இருக்காது என்றே நம்புகிறேன் என்றார் சுதர்சனம். அதன் பிறகு ராமதாஸ் நிருபர்களிடம் கூறியதாவது; இலங்கை தமிழர் பிரச்சினை குறித்து தங்கபாலு, சுதர்சனம் ஆகிய தலைவர்களுக்கு கடிதம் எழுதி இருந்தேன். அதனை படித்துப் பார்த்து விட்டு சுதர்சனம் என்னை வந்து சந்தித்தார். இலங்கையில் தற்போது தமிழினம் அழிந்து கொண்டிருக்கிறது. உலக நாடுகள் இதற்காக கண்டனக் குரல் எழுப்பி வருவதுடன் இலங்கை அரசு போரை நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன.

தமிழின அழிப்பில் இலங்கை அரசு ஈடுபட்டு வரும் இந்த நேரத்தில் ஜனாதிபதியின் உரை ஆறுதலாக அமைந்துள்ளது. இலங்கை அரசு போரை நிறுத்த வேண்டும் என்ற வேண்டுகோள் மட்டும் போதாது, போரை நிறுத்துங்கள் என்று அவர்களுக்கு இந்தியா கட்டளையிட வேண்டும். அதற்கான உரிமை இந்தியாவுக்கு உள்ளது. இந்த பிரச்சினையை ஐ.நா.மன்றத்திற்கு கொண்டு செல்லவும் மத்திய அரசுக்கு உரிமை உண்டு. இதனை இரண்டே நாட்களில் இந்திய அரசு நிறைவேற்ற வேண்டும். ஐ.நா.மன்றத்திற்கு மட்டுமன்றி சர்வதேச மனித உரிமை அமைப்பிற்கும் இந்த பிரச்சினையை கொண்டு சென்று இலங்கையில் உடனடியாக போரை நிறுத்த அனைத்து முயற்சிகளையும் மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும்.

இலங்கை அரசை போரை நிறுத்துங்கள் என்று கண்டிப்புடன் இந்தியா சொன்னால் அதற்கு நிச்சயம் பலன் கிடைக்கும். புலிகள் தரப்பில் போரை நிறுத்த தயாராக இருப்பதாக அந்த இயக்கத்தின் அரசியல் பிரிவு தலைவர் நடேசன் ஏற்கனவே அறிவித்துவிட்டார்.  ஆயுதங்களை ஒப்படைத்து சரணடைந்து விட்டு ஒரு போராளி இயக்கம் பேச்சுவார்த்தை நடத்த முடியாது. எனவே போரை நிறுத்தி பேச்சுவார்த்தை நடத்துமாறு இலங்கை அரசை இந்தியா நிர்ப்பந்திக்க வேண்டும்.

“1987ஆம் ஆண்டும் தற்போது நடைபெறுவதுபோல இலங்கையில் தமிழின படுகொலை நடைபெற்றது. அப்போது பிரதமராக இருந்த ராஜீவ் காந்தி விமானம் மூலம் இலங்கை தமிழர்களுக்கு உணவு மற்றும் மருந்துப் பொருட்களை வழங்கினார். அதே நிலைதான் இப்போதும் உள்ளது. இது தொடர்பாக எனக்கு கிடைத்த பல்வேறு தகவல்களின் தொகுப்புகளையும் சுதர்சனத்திடம் கொடுத்துள்ளேன். ராஜீவ் காந்தியை இழந்தது வருத்தத்திற்குரியது. தீட்சித் போன்றவர்களின் தவறான ஆலோசனைகளே அவரது இழப்புக்குக் காரணம். இப்போதும் இலங்கைப் பிரச்சினையில் மத்திய அரசுக்கு தவறான ஆலோசனைகளே வழங்கப்படுகின்றன. இந்த போக்கை கைவிட்டு ராஜீவ் காந்தியின் ஆலோசகராகவும், வெளியுறவுத்துறை செயலாளராகவும் இருந்த ஏ.பி.வெங்கடேஸ்வரனிடம் மத்திய அரசு ஆலோசனை பெற வேண்டும்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 Comment

  • palli
    palli

    மருத்துவர் ஜயா அவர்களே இந்தவிடயத்தை இரு தினங்களில் இந்தியஅரசு கவனிக்காத பட்ச்சத்தில் மதிய மந்திரி(சுகாதார) பதவி விலகுவார் என ஒருவரி செர்த்தால் மத்தியஅரசு உங்கள் கோரிக்கையை பற்றி யோசிக்க ஆவது செய்வார்கள்.

    Reply