அடிப் படை உரிமை மீறல் தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் மனுக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சட்டத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 2007 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது கடந்த வருடத்தில் அடிப்படை உரிமை மீறல் தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் 156 மனுக்கள் கூடுதலாக தாக்கல்செய்யப்பட்டுள்ளன எனவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், 2007 இல் அடிப்படை உரிமைமீறல் தொடர்பாக 456 மனுக்கள் உயர்நீதிமன்றத்துக்குக் கிடைத்துள்ள அதேசமயம் 2008 இல் 621 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.மேலும் இந்த எண்ணிக்கை 2006 ஆம் ஆண்டில் 398 ஆக குறைந்துள்ளது.
இதனிடையே, அடிப்படை உரிமை மீறல் தொடர்பாக 2008 இல் உயர்நீதிமன்றத்துக்கு தாக்கல்செய்யப்பட்ட சில மனுக்கள் மீது சர்ச்சைக்குரிய தீர்ப்புகள் வழங்கப்பட்டிருப்பதையும் சட்டத்துறை ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அத்துடன் இந்த வருடத்தில் இந்தமாதம் ஆறாம் திகதிவரை அடிப்படை உரிமை மீறப்பட்டமை தொடர்பாக 84 மனுக்கள் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.