17ல் தமிழகமெங்கும் மனிதசங்கிலி போராட்டம்: பழ.நெடுமாறன்

nedumaran.jpgஇலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அவ்வறிக்கையில், இலங்கை தமிழர் பிரச்சினைக்காக பிப்ரவரி 17-ந் தேதி தமிழகம் எங்கும் மனித சங்கிலி போராட்டம் நடத்துவது என இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் முடிவு செய்துள்ளது என்று தெரிவித்துள்ளார். அவர் மேலும், ’’தமிழ்நாட்டின் வடக்கே தாம்பரம் தொடங்கி செங்கல்பட்டு, திண்டிவனம், விழுப்புரம், உளுந்தூர்பேட்டை, திருச்சி, திண்டுக்கல், வாடிப்பட்டி, மதுரை, விருதுநகர், கோவில்பட்டி, நெல்லை, வள்ளியூர், நாகர்கோவில், குமரி வரையிலும் மனித சங்கிலி போராட்டம் நடைபெறும்.

மேற்கே கோவையில் தொடங்கி திருப்பூர், ஈரோடு, நாமக்கல், கரூர், குளித்தலை, திருச்சி, தஞ்சாவூர், நீடாமங்கலம், நாகப்பட்டினம் வரையிலும் கிழக்கு கடற்கரையோரமாக புதுச்சேரியில் தொடங்கி கடலூர், சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை, தரங்கம்பாடி, காரைக்கால், நாகப்பட்டினம், திருத்துறைப்பூண்டி, பட்டுக்கோட்டை, பரமக்குடி, ராமநாதபுரம், ராமேஸ்வரம், கடலாடி, தூத்துக்குடி வரை மனித சங்கிலி போராட்டம் நடைபெறும். மனித சங்கிலி போராட்டத்தின் போது பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்’’ தெரிவித்துள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *