பிரித்தானியாவில் நீண்ட இடைவெளிக்கு பிறகு ஒரே நாளில் 50000+ தொற்றாளர்கள் !

பிரித்தானியாவில் ஜனவரி மாத நடுப்பகுதிக்கு பிறகு, நாளொன்றுக்கான கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பாதிப்பு உச்சத்தை தொட்டுள்ளது.

இதன்படி கடந்த 24 மணித்தியாலத்தில் வைரஸ் பெருந் தொற்றினால், 51ஆயிரத்து 870பேர் பாதிக்கப்பட்டதோடு 49பேர் உயிரிழந்துள்ளனர்.

இதற்கு முன்னதாக கடந்த ஜனவரி 15ஆம் திகதி 55,553பேர் பாதிக்கப்பட்டதற்கு பிறகு பதிவான நாளொன்றுக்கான அதிகப்பட்ச பாதிப்பு எண்ணிக்கை இதுவாகும்.

உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட ஏழாவது நாடாக விளங்கும் பிரித்தானியாவில், இதுவரை மொத்தமாக 53இலட்சத்து 32ஆயிரத்து 371பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், ஒரு இலட்சத்து 28ஆயிரத்து 642பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட எட்டு இலட்சத்து 18ஆயிரத்து 421பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 551பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து மொத்தமாக, 43இலட்சத்து 85ஆயிரத்து 308பேர் பூரண குணமடைந்துள்ளனர்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *