ஒக்ஸ்போர்ட்டின் அஸ்ட்ராஜெனெகா முதலாம் தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டவர்களுக்கு, நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ள பைசர் தடுப்பூசிகள் இரண்டாம் தடுப்பூசியாக செலுத்தப்படவுள்ளன என இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
இலங்கை கொள்வனவு செய்த முதலாம் தொகுதி பைசர் தடுப்பூசிகள் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. இரண்டாவது செலுத்துகையை மேற்கொள்ளும்போது, கர்ப்பிணித் தாய்மார்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படவுள்ளது என சுகாதார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.