ஹெரோயின் கடத்தல் வழக்கில் இலங்கையைச் சேர்ந்த 3 பேருக்கு தலா 11 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது.
சென்னையிலுள்ள வருவாய் புலனாய்வு அதிகாரிகளுக்கு ஹெரோயின் கடத்தப்படுவதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து கீழ்ப்பாக்கத்திலுள்ள ஹோட்டல் அறை ஒன்றில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். 20 கிலோ எடையுள்ள ஹெரோயின் அங்கிருந்து பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக இலங்கையைச் சேர்ந்த ரியாஸ் ஃபரூக், சுபேர் முபாரக் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கொழும்பில் இருந்து திருவனந்தபுரம் வழியாகச் சென்னைக்கு ஹெரோயின் கடத்தி வந்தது விசாரணையில் தெரிய வந்தது. அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் சஜித் நிஷாந்தா என்பவர் சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக போதைப் பொருள் தடுப்புப் பிரிவு பொலிஸார் குற்றப் பத்திரிகையைத் தாக்கல் செய்தனர்.