குழந்தைகள் கடத்தல், விற்பனைகளில் அதிகாரிகள், அரசியல்வாதிகள் தொடர்பு

baby-01.jpgஅண்மைக் காலங்களில் நாட்டில் இடம்பெற்றுவருகின்ற குழந்தைகள் விற்பனை மற்றும் கடத்தல்கள் நடவடிக்கைகளில் சில அரசியல்வாதிகளுக்கும் தொடர்புகள் இருப்பதாக தெரியவந்துள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் ஜெகத் வெல்லவற்ற தெரிவித்துள்ளார். சில ஆஸ்பத்திரிகளில் அதிகாரிகள், சிற்ழியர்கள் மற்றும் பதிவாளர்களுக்கும் இதில் தொடர்புகள் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

குழந்தைகள் விற்பனை தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்து செல்வதற்கும் சில அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் அதில் தலையிட்டு அதனைத் தடுப்பதற்கு முயல்வதாகவும் அவர் குறிப்பிட்டார். குழந்தைகளை விற்பனை செய்யும் சம்பவங்கள் தற்போது பகிரங்கமாக நடைபெறும் அளவுக்கு வந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

கடந்த வாரம் மாளிகாவத்தையில் குழந்தை ஒன்று 25 ஆயிரம் ரூபாவிற்கு விற்கப்பட்ட போது பொலிஸார் மடக்கிப்பிடித்தனர்.  இங்கு ஏலவிற்பனையாக குழந்தைகள் விற்கப்படுவது தெரியவந்தது. கடந்த டிசம்பர் மாதம் கொழும்பு தேசிய வைத்திய சாலையில் ஒரு பிறந்த குழந்தை கடத்தப்பட்டது. பின்னர் கடத்திய பெண் கைது செய்யப்பட்டார்.

கடத்திய பெண் பின்னர் கைது செய்யப்பட்ட போது அவர் குழந்தையைக் கடத்தி விற்பவர் என்பது தெரியவந்தது. வெளிநாட்டு தம்பதியருக்கு விற்கப்பட்ட குழந்தை ஒன்று பின்னர் மீட்கப்பட்டது எனவும் அவர் தெரிவித்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *