எமது நாட்டிற்கு சுதந்திரம் கிடைத்து அறுபது வருடங்கள் கடந்துவிட்டபோதிலும் பயங்கரவாதிகளுடன் யுத்தம் செய்தல் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடல் மற்றும் “நாட்டைக்காட்டிக்கொடுக்கும் கைங்கரியங்களில் ஈடுபடுதல் போன்ற காரணங்களுக்காக முப்பது வருடங்கள் கழிந்துவிட்டன’என்று நீர்ப்பாசனம், துறைமுகம் மற்றும் விமான தேவைகள் அமைச்சர் சமல் ராஜபக்ஷ தெரிவித்தார். நாவுலவேமெடில்ல குளத்தின் நீர்ப்பாசன திட்ட அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்ததாவது;
பயங்கரவாதிகள் மாவில் ஆற்று நீரை மூடிக் கொண்டிருந்ததுபோல இந்த வேமெடில்ல குளத்து நீரை விவசாயிகளுக்குத் திறந்து விடாமல் மூடிக்கொண்டிருக்க அனுமதிக்க முடியாது. இக்குளத்தின் நிர்மாணப் பணிகள் 2001 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது முதல் தமது நிலங்கள், வீடு வாசல்களை இழந்த வேவெல தம்புள்ள மற்றும் நாவுல பிரதேச செயலகப்பிரிவுகளைச் சேர்ந்த விவசாயிகளுக்கு மாற்று நிலங்களும், இழப்பீடுகளும் வழங்கப்பட்டுள்ளன. எஞ்சியுள்ள 225 குடும்பங்களுக்கும் 582 காணித்துண்டுகள் விரைவில் வழங்குவதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தியாகியுள்ளன.மதிப்பீட்டுத் திணைக்களப்பிரிவில் ஏறுபட்டுள்ள கால தாமதத்தினால் உரிய நேரத்தில் காணிகளையோ இழப்பீட்டுத் தொகைகளையோ வழங்க முடியாமல் போயுள்ளது.
எவருக்கும் எவ்வித குற்றங் குறைகளை செய்வதற்கோ, தீங்குகள் செய்வதற்கோ மகிந்த ராஜபக்ஷ ஒருபோதும் ஆயத்தமில்லை. அதனால்தான் அவர் பதவிக்கு வந்ததும் தன்மீதுதாக்குதல்களை மேற்கொண்ட தமது கடமைகளுக்கு செய்தவர்களையும் அனைத்துக் குழுக்களையும் இடையூறு ஒன்றிணைத்து புதிய ஸ்ரீலங்காவை கட்டயெழுப்புவதற்கு ரணில் விக்கிரமசிங்கஹ உள்ளிட்ட அனைவருக்கும் அழைப்பு விடுத்தார்.கட்டியெழுப்பும் பணியில் இணைத்துக் கொள்வதில் ஜனாதிபதி வெற்றி பெற்றுள்ளார். ஏனைய கட்சிகள் இன்று பிளவுபட்டு சிதைந்துபோயுள்ளன. வேமெடில்ல நீர்த்தேக்கத்திற்கு இன்று முதல் “ரீ.பீ,தென்னக்கோன் குளம்’ எனப் பெயரிடப்படுகிறது.
காலஞ்சென்ற ரீ.பீ.தென்னக்கோன் தம்புள்ள தொகுதி மக்களுக்கு செய்த தேவையை நினைவு கூரும் முகமாக இப்பெயரில் இக்குளம் இன்று முதல் அழைக்கப்படும். இக்குளத்து நீரின் மூலம் 6650 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும் என்பதில் நாம் பெருமை அடைகிறோம். பயங்கரவாதிகளிடமிருந்து எமது நாட்டை இன்னும் சில தினங்களில் மீட்டுக்கொள்வோம். கிழக்கை நாம் விடுவித்த கையோடு ஒலுவில் பிரதேசத்தில் துறைமுகமொன்றை அமைக்கும் பணிகளை ஆரம்பித்தோம். கொழும்புத் துறைமுகத்தை விரிவுபடுத்துவது தொடர்பாக வருடக்கணக்கில் பேச்சுவார்த்தைகளை அப்போது அதிகாரத்திலிருந்தவர்கள் நடத்தினார்கள். வருடாந்தம் திட்டங்களை வகுத்தனர். செயல்வடிவம் பெறவில்லை. ஆனால், ஜனாதிபதியின் ஆலோசனையின்பேரில் கொழும்புத் துறைமுகத்தை விரிவு படுத்தும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன. யுத்தம் செய்வதுடன் அபிவிருத்திப் பணிகளையும் அரசாங்கம் முன்னெடுத்துச்செல்கிறது என்பதை நீங்கள் இதன்மூலம் அறிந்துகொள்ளலாம். பிரபாகரனால் நிர்மாணிக்கப்பட்ட விமான ஓடுபாதைகளில் எமது விமானங்கள் தரித்து நிற்கும் நாள் வெகு தொலைவிலில்லை’ என்று கூறினார்