பசுவின் சிறுநீரும், பசு சாணமும் கொரோனா வைரசை குணப்படுத்தாது என கூறியவர்கள் கைது – இந்தியாவின் மணிப்பூரில் சம்பவம் !

இந்தியாவின் மணிப்பூரில் பைரன் சிங் தலைமையில் பாரதிய ஜனதா ஆட்சி நடைபெறுகிறது. அம்மாநில பா.ஜ.க. தலைவர் எஸ்.திகேந்திர சிங் ரோனா கொரோனாவுக்கு மருத்துவமனையில் தங்கி சிகிச்சை எடுத்து வந்தார்.

இந்நிலையில் கடந்த வாரம் திகேந்திர சிங் சிகிச்சை பலனின்றி காலமானார். அவரது மறைவு குறித்து பத்திரிகையாளர் கிஷோரேச்சந்திர வாங் கேமும், சமூக ஆர்வலர் எரேண்ட்ரோ லெய் கொம்பமும் கிண்டலாக விமர்சனம் செய்து முக நூலில் பதிவு செய்து இருந்தனர். அவர்கள் தங்களது முகநூல் கணக்கில் திகேந்திர சிங் மறைவு குறித்து, பசுவின் சிறுநீரும், பசு சாணமும் கொரோனா வைரசை குணப்படுத்தாது என பதிவு செய்து இருந்தனர். இது தொடர்பாக காவல்துறைக்கு புகார் சென்றது. இதனை யடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர்.

இந்திய தண்டனை சட்டம் பிரிவு செய்து 153ன் கீழ் வழக்கு பதிவு அவர்கள் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை அவர்களுக்கு இம்பால் நீதிமன்றம் பெயில் வழங்கியது. இதனையடுத்து சிறையில் அவர்கள் இருவரும் வெளியே வருவதற்கு தேவையான நடை முறைகளை நிறைவு செய்வதற்கு முன்னதாக அவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இம்பால் மேற்கு மாவட்ட காவல் துறை கண் காணிப்பாளர் கே. மேகா சந்சிர சிங், கிஷோரேச்சந்திர வாங்கேம், எரேண்ட்ரோ லெய்கொம்பம் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப் பட்டுள்ளதை உறுதி செய்துள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *