அகதிகள் தங்கியுள்ள பாடசாலைகளை இயங்க வைப்பதற்கு மாற்று ஏற்பாடுகள்

school-2.jpgவன்னி யிலிருந்து இடம்பெயர்ந்து வவுனியா வரும் மக்கள் தங்கவைக்கப்படும் பாடசாலைகளின் மாணவர்களுடைய கல்வி நடவடிக்கைகளுக்காக மாற்று ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன் பிரகாரம் மேற்படி பாடசாலைகளில் அனைத்து வகுப்புகளும் பிற்பகல் 1.30 மணிமுதல் மாலை 530 மணிவரை நடைபெறவேண்டுமென வலயக்கல்விப்பணிப்பாளர் திருமதி வீ.ஆர்.ஏ. ஒஸ்வோல்ட் சம்பந்தப்பட்ட பாடசாலை அதிபர்களுக்கு அறிவித்துள்ளார். பூந்தோட்டம், நெளுக்குளம், தாண்டிக்குளம், பிரமண்டு, காமினி, செட்டிகுளம் மகாவித்தியாலயங்களிலும் இந்துக் கல்லூரியிலும் வன்னியிலிருந்து இடம் பெயர்ந்து வரும் மக்கள் தங்கவைக்க இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்தப் பாடசாலை மாணவர்களின் நாளாந்தக் கல்வி நடவடிக்கைகள் மாற்றுப்பாடசாலைகளில் ஒழுங்கு படுத்தப்பட்டுள்ளதாகவும் கல்விப்பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

மாற்ற முறை பாடசாலை ஒழுங்கு விபரம்; பூந்தோட்டம் ம. வி மாணவர்கள் தரம் 1 முதல் 5 வரை தம்பனைச் சோலை கேதீஸ்வர வித்தியாலயம், தரம் 6 முதல் 10 வரை அண்ணா நகர் பரமேஸ்வரா வித்தியாசாலை தரம் 11 முதல் 13 வரை வவுனியா மதீனா வித்தியாலயம். நெளுக்குளம் மவி மாணவர்கள். தரம் 1 முதல் 5 வரை கூமாங்குளம் சித்திவிநாயகர் மவி, தரம் 6 முதல் 11 வரை முஸ்லிம் மவி. தரம் 12 முதல் 13 வரை விபுலானந்தா கல்லூரி. தாண்டிக்குளம் பிரமண்டு வித்தியாலயம் 1 முதல் 11 வரையிலான மாணவர்கள் சைவபிரகாச வித்தியாசாலை. பூவசரன்குளம் ம.வி மாணவர்களை பழைய பாடசாலை கட்டிடத்தில் நடத்துவதற்கு ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன.

இந்துக்கல்லூரி மாணவர்கள் தரம் 1 முதல் 5 வரை சமளங்குளம் அ.த.க.பா, தரம் 6 முதல் 13 வரை வெளிக்குளம் கனிஷ்ட உபா காமினி ம.வி மாணவர்கள் பாடசாலையின் ஒரு பகுதியில் நடத்துவதற்கு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன. செட்டிக்குளம் ம.வி பரீசீலனையில் உள்ளது. வகுப்புகள் 1.30 மணிமுதல் மாலை 5.30 மணிவரை நடைபெறவேண்டும் கடமைக்கு ஆசிரியர்களை செல்வதற்கு ஏதுவான பணிப்புரைகளும் விடுக்கப்பட்டுள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *