புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள வவுனியா நகர சபையின் கலாசார மண்டபம் இன்று திறந்து வைக்கப்படவுள்ளதாக நகர சபை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
நிக்கோட் திட்டத்தின் கீழ் 500 இலட்சம் ரூபாய் செலவில் கட்டி முடிக்கப்பட்டுள்ள இந்த கலாசார மண்டபத்தை வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மீள்குடியேற்ற அமைச்சருமான றிஷாத் பதியுதீன் திறந்து வைக்கவுள்ளார்.
இந்த வைபவத்தில் வட மாகாண ஆளுநர் டிக்சன் சரத் சந்திரடிலா, வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஏனைய அதிகாரிகள் பலரும் கலந்து சிறப்பிக்கவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.