இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் ‘வயம்ப சேவை’ என்ற பெயரில் பிரா ந்திய ஒலிபரப்பொன்றை இன்று குருநாகலில் இருந்து ஆரம்பிக்கின்றது. 99.6 எப்.எம். அலை வரிசையினூடாக இவ் ஒலிபரப்பு இடம்பெறவுள்ளது.
தகவல் ஊடகத்துறை மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் அநுர பிரியதர்சன யாப்பாவின் வேண்டுகோளின் பேரில் இச்சேவை ஆரம்பிக்கப்படுகின்றது. இதன் முதல் ஒலிபரப்பாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று குருநாகலில் இடம்பெறும் பொதுக்கூட்டத்தில் நிகழ்த்தும் உரை ஒலிபரப்பப்படவுள்ளது.
தினமும் அதிகாலை 5 மணிமுதல் இரவு 10 மணி வரை இடம்பெறும் இப்பிராந்திய சேவை குருநாகல்-நீர்கொழும்பு வீதியில் உள்ள பிராந்திய சேவை கட்டிடத்தில் இருந்து ஒலிபரப்பப்படவுள்ளது.