இந்திய கிரிக்கட் அணி வீரர்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்துக் கலந்துரையாடடியுள்ளனர். கிரிக்கட் சுற்றுலா மேற்கொண்டு தற்போது இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய அணி வீரர்கள் (04) அலரி மாளிகையில் ஜனாதிபதியைச் சந்தித்துள்ளனர்.
இந்த கிரிக்கட் சுற்றுலாவின்போது இரு அணிகளுக்குமிடையில் 5 ஒரு நாள் சர்வதேச போட்டிகளும் ஒரு ருவன்டி-20 போட்டியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.