மத்திய மாகாண சபைக்கு 58 உறுப்பினர்களை தெரிவுசெய்ய 17 இலட்சத்து 46 ஆயிரம் வாக்காளர்கள் தகுதி

ballot-box.jpgஎதிர் வரும் மத்திய மாகாணசபை தேர்தலில் நுவரெலியா, கண்டி, மாத்தளை ஆகிய மாவட்டங்களிலிருந்து 56 உறுப்பினர்கள் தெரிவுசெய்வதற்காக 17 இலட்சத்து 46 ஆயிரத்து 449 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதிபெற்றுள்ளார்கள். இதில் கண்டி மாவட்டத்தில் 30 உறுப்பினர்களை தெரிவுசெய்வதற்காக 9 இலட்சத்து 55 ஆயிரத்து 108 வாக்காளர்களும், நுவரெலியா மாவட்டத்தில் 16 உறுப்பினர்களை தெரிவுசெய்வதற்காக 4 இலட்சத்து 52 ஆயிரத்து 395 வாக்காளர்களும், மாத்தளை மாவட்டத்தில் 10 உறுப்பினர்களை தெரிவுசெய்வதற்காக 3 இலட்சத்து 38 ஆயிரத்து 946 வாக்காளர்களும் வாக்களிக்க தகுதிபெற்றுள்ளார்கள்.

நுவரெலியா மாவட்டத்தில் 14 அரசியல் கட்சிகள் 10 சுயேச்சைக் குழுக்கள் சார்பில் 456 வேட்பாளர்களும், கண்டி மாவட்டத்தில் 10 அரசியல் கட்சிகள் 8 சுயேச்சைக் குழுக்கள் சார்பாக 594 வேட்பாளர்களும், மாத்தளை மாவட்டத்தில் 12 அரசியல் கட்சிகள் 8 சுயேச்சைக் குழுக்கள் சார்பில் 260 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர்.

இம்மூன்று மாவட்டங்களிலுமிருந்து வாக்காளர்களின் வாக்குகள் மூலம் 56 உறுப்பினர்களும் போனஸாக 2 உறுப்பினர்களுமாக மொத்தம் 58 உறுப்பினர்கள் மாகாண சபைக்கு தெரிவு செய்யப்படவுள்ளனர். கடந்த மத்திய மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் 22 உறுப்பினர்களும், ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் 16 உறுப்பினர்களும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் போட்டியிட்ட மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) சார்பில் 9 உறுப்பினர்களும், ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் போட்டியிட்ட இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் 7 உறுப்பினர்களும் முஸ்லிம் காங்கிரஸ் 2 உறுப்பினர்களும், மலையக மக்கள் முன்னணி 2 உறுப்பினர்களுமாக 58 உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *