தேசத்தினுடைய வாசகர்களுக்கு பிறந்துள்ள பிலவ வருட தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள்..!
செல்வம் பட்டம் பதவிகளுக்காக எமது உள்ளார்ந்த மகிழ்ச்சியயைத் தொலைத்துவிடாமல் உள்ளக்களிப்புடன் வாழ அனைவருக்கும் நமது சிங்கள – தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

மனிதகுல வரலாற்றின் மிக இக்கட்டான காலகட்டத்தின் சாட்சியங்களாக நாமெல்லாம் ஆகியிருக்கின்றோம். சமூகத்தின் மனிதத்துவத்தின் அவசியத்தை உணர்த்துகின்ற ஆண்டாக கடந்து செல்கின்ற ஆண்டு அமைந்துள்ளது. அதனால் தனி மனித சிந்தனையோடு சற்று சமூக சிந்தனையயையும் இணைத்து நமக்கும் நம்மைச் சுற்றியுள்ளவர்களுக்கும் நன்மை விளைவிக்கும் வகையில் எமது வாழ்க்கைப் பயணத்தை அமைத்துக்கொள்வோம். உள்ளார்ந்த மகிழ்ச்சி மட்டுமே வாழ்க்கையின் இலக்கு. வழிபிறப்பதற்கு தை பிறந்தால் மட்டும் போதாது. நம் உள்ளங்களில் நல் எண்ணங்களும் பிறக்க வேண்டும்! செல்வம் பட்டம் பதவிகளுக்காக எமது உள்ளார்ந்த மகிழ்ச்சியயைத் தொலைத்துவிடாமல் உள்ளக்களிப்புடன் வாழ அனைவருக்கும் நமது சிங்கள – தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!