வலைப்பயிற்சி அதிகமாக இல்லாததாலேயே கேன் வில்லியம்சன் களமிறக்கப்படவில்லை – தலைமை பயிற்சியாளர்

ஐ.பி.எல் கிரிக்கெட்டில் நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் வெளிநாட்டு வீரர்களில் பேர்ஸ்டோ, டேவிட் வார்னர், முகமது நபி, ரஷித் கான் ஆகியோர் களம் இறங்கினர்.
கடந்த வருடத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் ஆபத்தான நிலையில் இருந்தபோதெல்லாம் தனியொரு மனிதனாக துடுப்பெடுத்தாடி  அசத்தி அணியின் வெற்றிக்கு உதவியது கேன் வில்லியம்சன் தான்.
தலைசிறந்த வீரரரான அவருக்கு இடம் கொடுக்காதது குறித்து ரசிகர்கள் அணி நிர்வாகத்தை சமூக வலைத்தளங்களில் கடுமையாக விமர்சனம் செய்தனர்.
இந்ந நிலையில் அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் டிரேவர் பெய்லிஸ் கேன் வில்லியம்சனை களம் இறக்காதது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
கேன் வில்லியம்சன் குறித்து டிரேவர் பெய்லிஸ் கூறுகையில்
‘‘போட்டியில் விளையாடுவதற்கான தகுதியை பெற கேன் வில்லியம்சனுக்கு இன்னும் கொஞ்சம் நேரம் தேவை என் நாங்கள் எண்ணுகிறோம். வலைப்பயிற்சியில் கொஞ்சம் அதிகமாக பயிற்சி மேற்கொள்ள வேண்டும். இது நடந்திருந்தால் பேர்ஸ்டோவிற்குப் பதிலாக கேன் வில்லியம்சன் இடம் பிடித்திருப்பார். ஆனால் பேர்ஸ்டோ இந்தியாவிற்கு எதிரான தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். போட்டி சென்று கொண்டிருக்கும்போது கட்டாயம் கேன் வில்லியம்சன் அணியில் இடம் பிடிப்பார்’’ என்றார்.
பேர்ஸ்டோ நேற்றைய போட்டியில் 40 பந்தில் 55 ஓட்டங்கள் அடித்தார். இந்த போட்டியில் ஐதராபாத் அணி தோல்வியடைந்தததும் குறிப்பிடத்தக்கது.
Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *