இன்று மன்னாரில் மக்கள் ஆர்ப்பாட்டம்.

இன்று மன்னாரில் காலை 11 மணிக்கு சமாதானத்தை விரும்பும் தமிழர்கள் புலிகளுக்கெதிரான ஆர்ப்பாட்டம் ஒன்றை நடாத்த திட்டமிட்டுள்ளதாக தெரியவருகின்றது. இவ் ஆர்பாட்டத்தில் வன்னியில் ஓர் சிறிய பகுதியினுள் முடங்கியுள்ள புலிகள் தொடர்ந்தும் மக்களை மனித கேடயங்களாக பயன்படுத்துவதை தவிர்த்து அவர்களது இயல்பு வாழ்கைக்கு வழிவிடவேண்டும். போராட்டம் எனும் பெயரால் தொடர்ந்தும் தமிழ் இளைஞர் யுவதிகளை யுத்த முனையில் பலிகொடுப்பதை கைவிட வேண்டும். தமது விருப்பத்திற்கு மாறாக இயக்கத்தில் தொடர்ந்தும் தடுத்து வைத்து போரில் ஈடுபடுத்தும் இளைஞர் யுவதிகளை விடுவித்து அவர்களை தமது குடும்பத்தினருடன் இணைந்து வாழ அனுமதிக்க வேண்டும் என்கின்ற கோரிக்கைகளுடன்  இவ் ஆர்ப்பாட்டம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

இவ்வார்பாட்டத்திற்கு மன்னார் வவுனியா பிரதேசங்களில் வசிக்கும் மக்கள் எவ்வித அச்சமும் இன்றி புலிகளின் தொடர் கொடுமைகளுக்கு எதிராக குரல் கொடுக்க இணைந்து கொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் வேண்டி நிற்கின்றனர்.-

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *