“இந்திய அணியில் இடம் பிடித்தது கனவு போன்று உணர்கிறேன்” – இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் களம் காண்கிறார் காண்கிறார் சூர்யகுமார் யாதவ் !

இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது.
இத்தொடர் முடிந்த பின்னர் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் இரு அணிகளும் பலப்பரீட்சை நடத்துகின்றன. டி20 தொடருக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது.
இதில் சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், ராகுல் தெவாட்டியா ஆகியோர் அணியில் இடம் பிடித்துள்ளனர். சூர்யகுமார் யாதவ் ஐபிஎல் மற்றும் உள்ளூர் தொடர்களில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையிலும் இந்திய அணியில் சேர்க்கப்பட்டவில்லை. ஆஸ்திரேலியா தொடரின்போது அணியில் தேர்வு செய்வார்கள் என எதிர்பார்த்தார். அப்போது நிராகரிக்க மிகவும் விரக்தியானார்.
இந்த நிலையில்தான் தற்போது முதன்முறையாக இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளானர். நீண்ட நாட்களாக இருந்த பொறுமையின் காரணமாக தற்போது அணியில் இடம் பிடித்துள்ளார். இந்திய அணியில் இடம் பிடித்தது கனவு போன்று உணர்கிறேன் என சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.
‘‘இறுதியாக சூர்யகுமார் யாதவுக்கு அணியில் இடம் கிடைத்திருப்பது சிறந்தது. குட் லக்’’ என ஹர்பஜன் சிங் தெரிவித்துதுள்ளார்.
‘‘இறுதியாக சூர்யகுமார் யாதவ் காத்திருப்பு முடிவுக்கு வந்துள்ளது. வாழ்த்துகள், இஷான் கிஷன், ராகுல் தெவாட்டியா ஆகியோர் அணியில் முதன்முறையாக இடம் பிடித்துள்ளனர். அவர்களுக்கு குட்லக்’’ என்று இர்பான் பதான் தெரிவித்துள்ளார்.
Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *