“புதிய வகை கொரோனாவையும் எதிர்கொள்ளும் சக்தி அஸ்ட்ராஸெனெகா தடுப்பு மருந்துக்கு உள்ளது” – புதிய ஆய்வில் உறுதி !

கொரோனா தடுப்பூசிகள் இறுதிக்கட்ட பணிகள் முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்த போது புதிய வகை கொரோனா பரவ ஆரம்பித்திருந்தது. இந்நிலையில் ஏற்கனவே தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகள் புதிய வகை கொரோனாவை எதிர்க்கும் செயல்திறனுள்வையாக காணப்படுமா..? என்பது பலருடைய சந்தேகமாக காணப்பட்டு வந்தது.

இந்நிலையில் புதிய மாறுபாடு கொவிட்-19 தொற்றை எதிர்கொள்ளும் சக்தி அஸ்ட்ராஸெனெகா தடுப்பு மருந்துக்கு உள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

புதிய கொரோனா தொற்றுக்கு எதிராக 74 புள்ளி 6 சதவீத செயல் திறனும், சாதாரண தொற்றுக்கு எதிராக 84 புள்ளி 1 சதவீத செயல்திறனும் ஒக்ஸ்போர்ட் நிறுவன தடுப்பூசிக்கு இருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அதேநேரம் தென்னாபிரிக்காவில் காணப்படும் புதிய கொரோனா பரவலுக்கு எதிராக அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசி முழுவீச்சில் செயற்படுமா என்று தெளிவான தரவுகள் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாகவே உருமாறிய கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுக்கு எதிராக தடுப்பூசிகளின் செயற்திறனை அதிகரிப்பது குறித்து, தயாரிப்பு நிறுவனங்கள் ஆய்வில் ஈடுபட்டு உள்ளதாக, பிரித்தானியாவின் தடுப்பூசி வெளியீட்டுக்கு பொறுப்பான அமைச்சர் நதிம் ஸஹாவி தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *