இந்தியா – இங்கிலாந்து முதலாவது டெஸ்ட் – வலுவான நிலையில் இங்கிலாந்து !

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான, முதலாவது டெஸ்ட் போட்டி இன்று சென்னையில் ஆரம்பமாகியுள்ளது.

சென்னையில் இன்று (வெள்ளிக்கிழமை) ஆரம்பமான இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி, இன்றைய ஆட்டநேர முடிவில், 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 263 ஓட்டங்களைபெற்றுக்கொண்டது.ஜோ ரூட்

இதன்போது இங்கிலாந்து அணி சார்பில், ரொறி பர்ன்ஸ் 33 ஓட்டங்களுடனும் டேனியல் லோரன்ஸ் ஓட்டமெதுவும் பெறாத நிலையிலும் ஆட்டமிழந்தனர். சிறப்பாக துடுப்பெடுத்தாடி வந்த டோமினிக் சிப்ளி 87 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். இன்றைய  ஆட்ட நேர முடிவில் ஆட்டநேர முடிவில், ஜோ ரூட் 128 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காது களத்தில் இருந்தார்.

இந்திய அணியின் பந்துவீச்சில், ஜஸ்பிரிட் பும்ரா 2 இலக்குகளையும் அஸ்வின் 1 இலக்கினையும் வீழ்த்தினர்.

இன்னமும் 7 இலக்குகள் வசமுள்ள நிலையில், போட்டியின் இரண்டாவது நாளை, இங்கிலாந்து அணி நாளை தொடரவுள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *