70 ஆண்டுகளுக்கு பின் அமெரிக்காவில் மரணதண்டனை விதிக்கப்பட்ட பெண் – விசஊசி ஏற்றி மரணதண்டனை நிறைவேற்றம் !

1953ஆம் ஆண்டுக்கு பின்னர் முதல் தடவையாக பெண்ணொருவருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியள்ளது.

அமெரிக்காவின் மரணதண்டனை விதிக்கப்பட்டஒரேயொரு பெண் குற்றவாளிக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. லிசா மொன்ட்கொமேரி என்ற பெண்ணிற்கே அதிகாரிகள் மரணதண்டனையை நிறைவேற்றியுள்ளனர்.

இந்தியானாவில் உள்ள சிறையொன்றில் விசஊசி ஏற்றி லிசா மொன்ட்கொமேரிக்கு அதிகாரிகள் மரணதண்டனையை நிறைவேற்றியுள்ளனர்.
மரணதண்டனையை நிறைவேற்றுவதற்கான தடையை நீதிமன்றம் நீக்கியதை தொடர்ந்து அதிகாரிகள் மரணதண்டனையை நிறைவேற்றியுள்ளனர்.

குறிப்பிட்ட பெண் சித்தசுவாதீனமற்றவர் சிறுவயதில் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்பட்டவர் என அவரது சட்டத்தரணிகள் வாதிட்டு வந்ததன் காரணமாக இந்த விவகாரம் அமெரிக்காவினதும் உலகினதும் கவனத்தை ஈர்த்திருந்தது.

அமெரிக்காவின் மிசோரி மாகாணத்தைச் சேர்ந்த பெண் லிசா மோன்ட்கோமெரி. இவர் கடந்த 2004-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஸ்கிட்மோர் நகரில் வசித்து வந்த 23 வயதான பாபி ஜோ ஸ்டின்னெட் என்ற கர்ப்பிணியின் வீட்டுக்கு சென்றார். எலியை வேட்டையாடும் பூனையை தத்தெடுப்பதற்காக சென்ற லிசா 8 மாதக் கர்ப்பிணியாக இருந்த ஸ்டின்னெட்டின் கழுத்தை நெரித்து கொலை செய்தார்.
பின்னர் அவர் கத்தியால், கர்ப்பிணியின் வயிற்றைக் கிழித்து கருப்பையில் இருந்த குழந்தையை எடுத்தார். இந்த வழக்கில் கடந்த 2007-ம் ஆண்டு லிசாவுக்கு மரண தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பளித்தது. ஆனால் இந்த தீர்ப்பை எதிர்த்து அவர் மேல் முறையீடு செய்தார்.

மரணதண்டனை நிறைவேற்றப்படுவதற்கு முன்னர் அவரிடம் இறுதி ஆசைகுறித்து கேள்வி எழுப்பியவேளை அவர் எதுவுமில்லை என தெரிவித்துள்ளார்.
இந்த மரணதண்டனையை நிறைவேற்றிய அனைவரும் அதற்காக வெட்கப்படவேண்டும் என மரணதண்டனை நிறைவேற்றப்பட்டவரின் சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.

சேதமடைந்த மற்றும் மருட்சியடைந்த பெண்ணை கொலைசெய்யும் வேட்கையில் இந்த அரசாங்கம் தீவிரமாகயிருந்தது என அவர் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் காரணமாகவும் பின்னர் நீதிபதியொருவரின் உத்தரவு காரணமாகவும் மரணதண்டனை நிறைவேற்றப்படுவது பிற்போடப்படப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

எனினும் உச்சநீதிமன்றம் தண்டனையை நிறைவேற்றுவதற்கு அனுமதியளித்தது.
குறிப்பிட்ட பெண் பிறக்கும்போதே மூளை பாதிப்புடன் பிறந்தவர் மரணதண்டனை நிறைவேற்றப்படுவதற்கு தகுதியற்ற உடல்நிலையை கொண்டவர் என அவரது சட்டத்தரணிகள் வாதிட்டனர்.
சிறுமியாகயிருந்தவேளை அவர் தொடர்ச்சியாக குடும்ப உறவினர்களால் துஸ்பிரயோகப்படுத்தப்பட்டார் என சட்டத்தரணிகள் வாதிட்டனர்.

 

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *