இங்கிலாந்தில் கொரோனா தடுப்பூசி செலுத்ப்பட்டோர் தொகை இங்கிலாந்தில் 06 இலட்சத்தை தாண்டியது !

இங்கிலாந்தில் இதுவரை 6 லட்சத்திற்கும் அதிகமான மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் நோய்க்கு எதிரான தடுப்பூசியை பொது மக்களுக்கு செலுத்த முதன் முதலாக இங்கிலாந்து அரசு அனுமதி வழங்கியது. அதன்படி பைசர் மற்றும் பயோ என்டெக் நிறுவனங்கள் இணைந்து தயாரித்த கொரோனா தடுப்பூசிகள் இங்கிலாந்து மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் தங்கள் நாட்டு மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை துவங்கியுள்ளன.
இந்நிலையில் இங்கிலாந்து அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், கடந்த 8 ஆம் தேதியில் இருந்து 20 ஆம் தேதி வரை 6 லட்சத்து 16 ஆயிரத்து 933 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பைசர் நிறுவனத்திடம் இருந்து மொத்தம் 40 மில்லியன் கொரோனா தடுப்பூசிகளை வாங்க இங்கிலாந்து அரசு முடிவு செய்துள்ளது.
நாட்டில் உள்ள 500-க்கும் மேற்பட்ட மையங்களில் பொது மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
இதற்கிடையில் இங்கிலாந்தில் உருமாற்றம் பெற்ற புதிய வகை கொரோனா வைரஸ் அண்மையில் கண்டறியப்பட்டது. இதனால் அங்கு ஊரடங்கு விதிகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. மேலும் ஐரோப்பிய நாடுகளுடனான விமான போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளதால், இங்கிலாந்தில் வர்த்தம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *