இலங்கை அரசின் அழைப்பை யேற்று இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜி நேற்று மாலை இலங்கை வந்தடைந்தார். இவர், நேற்று மாலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினாரென வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
பொது மக்களை புலிகளின் பயங்கரவாதப் பிடியிலிருந்து விடுவிப்பதற்கான இராணுவ நடவடிக்கைகள் தொடர்ந்து வெற்றியளித்துக் கொண்டு இருக்கும் இவ் வேளையில் அமைச்சர் முகர்ஜியின் வருகை இடம் பெறுகின்றது.
இவ்வருகையானது பாரம்பரியமாக இந்தியா மற்றும் இலங்கையின் அதி உயர்மட்ட அரசியல் தலைவர்களிடையே நடைபெறும் பரஸ்பர – நன்மை பயக்கும் முக்கிய விடயங்கள் சம்பந்தமாக வெளிப்படையானதும் ஆக்கபூர்வமானதுமான கலந்துரையாடலாக அமைந்திருந்ததெனவும் வெளிவிவகார அமைச்சு கூறியது.