காளி பூஜையில் கலந்து கொண்ட “ஷாகிப் அல் ஹசனை துண்டாக வெட்ட வேண்டும்“ என கொலை மிரட்டல் !

பங்களாதேஷ் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் ஷாகிப் அல் ஹசன். சூதாட்டம் தொடர்பாக அவரை அணுகியதை மறைத்ததால் ஓராண்டு தடைபெற்றார். தற்போது அந்த தடை முடிந்ததால் வங்காளதேச அணிக்கு திரும்ப பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.
இவர் கொல்கத்தாவில் நடைபெற்ற காளி பூஜையில் கலந்து கொண்டார். அதன்பின் தன்னுடைய முகநூல் கணக்கில் நேரடி காணொளி மூலம் முஸ்லீம் உணர்வை புண்படுத்தியதாக மோசின் தலுக்தெர் என்பவர் ஷாகிப் அல் ஹசனுக்கு கொலை மிரட்டல் விடுத்தார். ஷாகிப் அல் ஹசனை துண்டாக வெட்ட வேண்டும் என அந்த நபர் கோபத்தில் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் பயிற்சி மேற்கொள்ளும் அவருக்கு வங்காள தேசம் கிரிக்கெட் சார்பில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் காவல் வழங்கப்பட்டுள்ளது. காளி பூஜைக்கு முன்னதாக நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். இது முஸ்லீம்களின் உணர்வை புண்படுத்துவதாக இருந்தால் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.
Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *