மன்னார் கடற்பரப்பில் விரைவில் எண்ணெய் அகழ்வுப் பணிகள் ஆரம்பம்

இலங்கை கடல்பரப்பில் எண்ணெய் அகழ்வு வேலைகளை விரைவில் ஆரம்பிக்கவுள்ளதாக இந்திய அரசின் உதவியுடன் இயங்கும் எண்ணெய் மற்றும் இயற்கை வாயு கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. புதுடில்லியில் இது தொடர்பாக நடைபெற்ற மாநாட்டில் அகழ்வு வேலைகள் குறித்து முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இக்கூட்டுத்தாபனத்தின் தலைவர் வீ.ஆர்.எஸ்.சர்மா மற்றும் இந்திய எண்ணெய் அமைச்சர் முரளி டீ.யூராவையும் பெற்றோலிய வள அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி சந்தித்து பேசிய போது இத்தகவல் தெரிவிக்கப்பட்டது. இதேவேளை, மன்னார் வளைகுடாப் பகுதியின் வடமேற்குப் பகுதியில் எண்ணெய் அகழ்வுகளை மேற்கொள்வதற்கு சீனா ஒப்புதல் அளித்துள்ளது. ஏற்கனவே பகிரங்க கேள்விப் பத்திரம் கோரல் மூலம் இந்திய கெயரன் நிறுவனம் ஒரு எண்ணெய் வளப்பகுதியை அகழ்வுக்காக பெற்றுள்ளது.

இது தொடர்பாக பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கான ஆவணங்களையும் கெயரன் நிறுவனம் தயார் செய்துள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *