“அடுத்த ஆண்டும் எம்.எஸ்.டோனி தான் சென்னையின் தலைவர்” – உறுதிப்படுத்தினார் சென்னை அணி உரிமையாளர் என் ஸ்ரீனிவாசன் !

அடுத்த ஆண்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எம்.எஸ் டோனி தான் தலைவராக வழிநடத்துவார் என்று அணியின் உரிமையாளர் என் ஸ்ரீனிவாசன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். கடந்த 10 ஆண்டுகளாக சிறப்பான செயல்பாடுகளை நிரூபித்துள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இது ஒரு மோசமான ஆண்டு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தோனியை தவிர வேற யாரு... அவர்தான் அடுத்த ஆண்டும் சிஎஸ்கே கேப்டன்... ஸ்ரீனிவாசன் சொல்லிட்டாரு!

மேலும் ருதுராஜ் கெய்க்வாட் இளம் விராட் கோலியை நினைவுபடுத்துவதாக பாப் டூ பிளசிஸ் தெரிவித்துள்ள கருத்தையும் ஸ்ரீனிவாசன் ஆமோதித்துள்ளார்.

ஐ.பி.எல் 2020 சீசனில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று அந்த அணியின் தலைவர் டோனி எதிர்பார்க்கப்பட்டார். கடந்த ஒரு ஆண்டாக அவர் சர்வதேச போட்டிகளில் விளையாடாத நிலையில் கடந்த ஆகஸ்ட் 15ம் திகதி சர்வதேச போட்டிகளில் இருந்து தன்னுடைய ஓய்வை அறிவித்தார். இந்நிலையில் ஐ.பி.எல்லில் அவர் சிறப்பாக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.  ஆனால் ரசிகர்களின் இந்த எதிர்பார்ப்பை தன்னுடைய மோசமான ஆட்டத்தின்மூலம் அந்த எதிர்பார்ப்பை பொய்யாக்கினார் டோனி.

அந்த அணி இறுதி போட்டிகளில் சிறப்பாக விளையாடி 12 புள்ளிகளுடன் 7வது இடத்தில் இறுதியாக நிலைபெற்றிருந்தது. ஆயினும் அந்த அணியின் தொடர் தோல்விகள் பிளே-ஆப் சுற்றிற்று அணி தகுதிபெறாததற்கு காரணமாக அமைந்தன. மோசமான ஆண்டு இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் கடந்த 10 ஆண்டுகளாக சிறப்பான செயல்பாட்டினை நிரூபித்துவந்த நிலையில், இந்த ஆண்டு ஒரு மோசமான ஆண்டு என்பதை ஒப்புகொள்ள வேண்டும் என்று அணியின் உரிமையாளர் என் ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார்.

அடுத்த ஆண்டு மீண்டும் சிறப்பாக வந்து ஐ.பி.எல்லை விளையாடுவோம் என்றும் அவர் கூறியுள்ளார்.

இதனிடையே அடுத்த ஆண்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை டோனி தான் தலைமையேற்று நடத்துவார் என்றும் ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார். தோனி தன்னிடம் அனைத்து விஷயங்கள் குறித்தும் ஏற்கனவே ஆலோசனை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார். சிறப்பான ருதுராஜ் கெய்க்வாட் கொரோனா பாதிப்பிலிருந்து ருதுராஜ் மிகவும் தாமதமாக தேறியதாக தெரிவித்துள்ள ஸ்ரீனிவாசன், முன்னாள் தென்னாப்பிரிக்க வீரர் பாப் டூ பிளசிஸ் ருதுராஜை இளம் விராட் கோலி என்று தெரிவித்துள்ள விமர்சனத்தை ஆமோதித்துள்ளார். நீண்ட நாட்களுக்கு பிறகு சிறப்பான ஒரு வீரரை பார்ப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *