சூப்பர் ஓவர்களாக நீண்ட நேற்றைய ஐ.பி.எல் ஆட்டம் – பஞ்சாப் திரில் வெற்றி !

மும்பை இந்தியன்ஸ் – பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் துபாயில் நேற்று  நடைபெற்றது.
நாணயச்சுழற்சியில் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி துடுப்பெடுத்தாட்டத்தை தேர்வு செய்தது. ரோகித் சர்மா 9 ஓட்டங்களிலும், சூர்யகுமார் யாதவ் ஓட்டம் ஏதும் எடுக்காமலும், இஷான் கிஷன் 7 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர்.
பஞ்சாப் அணிக்கு 177 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது மும்பை இந்தியன்ஸ்
38 ஓட்டங்களுக்குள் மும்பை அணி 3 இலக்குகளை இழந்தது. குயின்டன் டி காக் 53 ஓட்டகளும், குருணால் பாண்ட்யா 34 ஓட்டங்களும் எடுத்தனர். பொல்லார்ட் அதிரடியாக ஆடி 12 பந்தில் 34 ஓட்டங்களும், நாதன் கவுல்டர் நைல் ஆட்டமிழக்காமல் 24 ஓட்டங்களும் எடுத்தனர்.
இறுதியில், மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 6 இலக்குகள்  இழப்பிற்கு 176 ஓட்டங்கள் குவித்தது.
பஞ்சாப் சார்பில் ஷமி, அர்ஷ்தீப் சிங் ஆகியோர் தலா 2 இலக்குகளை வீழ்த்தினர்.
177 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணி களமிறங்கியது. கே எல் ராகுல், மயங்க் அகர்வால் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கினர். அகர்வால் 11 ஓட்டங்களிலும் , கிரிஸ் கெயில் 24ஓட்டங்களிலும், நிகோலஸ் பூரன் 24 ஓட்டங்களிலும், மேக்ஸ்வெல் ஓட்டம் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தனர். கேஎல் ராகுல் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்து அசத்தினார்.அவர் 77 ஓட்டங்களில் வெளியேறினார்.
2வது சூப்பர் ஓவரில் மும்பையை வீழ்த்தியது பஞ்சாப் அணிஅதன்பின் ஆடிய தீபக் ஹூடா பொறுப்புடன் ஆடினார். இறுதியில் 20 பந்துப்பரிமாற்ற  முடிவில் பஞ்சாப் அணி 6 இலக்குகளை இழந்து 176 ரன்கள் எடுத்தது.இதனால் போட்டி சமனில் முடிந்தது. ஹூடா 23 ஆட்டம் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
மும்பை அணி சார்பில் பும்ரா, 3 விக்கெட்டும், ராகுல் சஹர் இலக்குகளை வீழ்த்தினர்.
இதையடுத்து, சூப்பர் ஓவர் கடைப்பிடிக்கப்பட்டது. முதலில் பஞ்சாப் அணி விளையாடியது. கேஎல் ராகுலும், பூரனும் இறங்கினர். மும்பை சார்பில் பும்ரா பந்து வீசினார்.
சூப்பர் ஓவரில் பஞ்சாப் அணி 2 விக்கெட்டுக்கு 5 ரன்கள் மட்டுமே எடுத்தது.
தொடர்ந்து, மும்பை அணி சார்பில் ரோகித் சர்மா, டி காக் களமிறங்கினர். பஞ்சாப் சார்பில் ஷமி பந்து வீசினார். மும்பை அணிக்கும் இந்த சூப்பர் ஓவரில் 05 ஓட்டங்களே  கிடைக்க போட்டி மீண்டும் சமனானது.
இதையடுத்து, 2வது சூப்பர் ஓவர் வீசப்பட்டது. இதில் மும்பை அணி ஒரு விக்கெட்டுக்கு 11 ஓட்டங்கள் எடுத்தது.  அடுத்து இறங்கிய பஞ்சாப் அணி  கிறிஸ்கெய்ல் – மயங்க்அகர்வால் ஆகியோரின் அதிரடியுடன் 15 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது. பஞ்சாப் அணி பெற்ற 3வது வெற்றி இதுவாகும்.
Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *