பயங்கரவாதத்துக்கு எதிரான இறுதி யுத்தத்திற்கான ஆணையினை எதிர்வரும் மாகாண சபைத்தேர்தலில் வழங்குமாறு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நாட்டு மக்களை கேட்டுள்ளார். கண்டியிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் ஐக்கிய தேசியக்கட்சி உறுப்பினர்கள் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் இணைந்து கொள்ளும் நிகழ்வில் கலந்துகொண்டு அவர்களை வரவேற்று உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்;
பயங்கரவாதத்துக்கு எதிரான இறுதி யுத்தத்தினை மேற்கொள்வதா இல்லையா என்பது குறித்து எதிர்வரும் மத்திய மற்றும் வடமேல் மாகாண சபைத்தேர்தலில் மக்கள் தீர்மானித்து ஆணைவழங்க வேண்டும். பயங்கரவாதத்தை இல்லாதொழிக்க இராணுவத்தினர் வினைத்திறனுடன் செயற்படுகின்றனர். இந்நிலையில் இறுதி யுத்தத்தை முறியடிப்பதற்காக முயற்சித்து வருவதனால் அவர்களுக்கு பாடம் புகட்டி அரசுக்கு ஆணைவழங்க வேண்டுமென்றும் ஜனாதிபதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.