மும்பையில் இடம்பெற்ற தீவிரவாத தாக்குதலையடுத்து தெற்காசிய சுற்றுப் பயணத்தை மேற்கொள்ளும் இந்திய வெளிவிவகார செயலாளர் சிவசங்கர் மேனன் நாளை இலங்கை வரவிருப்பதாக வெளிவிவகார அமைச்சின் உயர்மட்ட அதிகாரியொருவர் தெரிவித்தார்.
இலங்கைக்கு நாளை மாலை வரும் மேனன் அடுத்தநாளே நாடு திரும்பவுள்ளார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்திக்க எதிர்பார்த்திருக்கும் மேனன், வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகமவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
இதேவேளை பெப்ரவரி இறுதியில் கொழும்பில் நடைபெறவுள்ள சார்க் அமைச்சர்களுக்கான மாநாடு தொடர்பாகவும் இவர் கலந்துரையாடவுள்ளார்.