இந்தியாவில் அசுர வேகத்தில் பரவும் கொரோனா – 24 மணி நேரத்தில் 50,000க்கும் மேற்பட்ட நோயாளர்கள்.

இந்தியாவில்  கொரோனா பாதிப்பு மின்னல் வேகத்தில் வருகிறது. கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை தினம் தினம் உச்சத்தை எட்டி வருகிறது.  இந்த நிலையில், இதுவரை இல்லாத அளவுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 57,118 பேருக்கு கொரோன தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், இந்தியாவில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 16,95,988 ஆக உயர்ந்துள்ளது.

அதேபோல், கடந்த  24 மணி நேரத்தில் 764 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம்  கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 36,511- ஆக உள்ளது. 10 97,374  கொரோனா தொற்றில் இருந்து குணம் அடைந்துள்ளனர். இந்தியாவில் இதுவரை 1,93,58,659-பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நேற்று மட்டும் 5.25 லட்சம் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *