மீள்குடியேற்ற அமைச்சின் ஏற்பாட்டில் யாழ்.பல்கலைக்கழக நூலகத்திற்கு 12 இலட்ச ரூபா பெறுமதியான நூல்கள் வழங்கப்பட்டுள்ளன. நேற்று வியாழக்கிழமை யாழ்.பல்கலைக்கழகத்திற்கு விஜயம் செய்த மீள்குடியேற்ற அமைச்சர் குணரட்ன வீரக்கோன், பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் ஆகியோர் நேரடியாக இந்த நூல்கள் கையளித்தனர்.
யாழ்.பல்கலைக்கழக பதில் துணைவேந்தர் பேராசிரியர் என்.சண்முகலிங்கன், பல்கலைக்கழக நூலகர் ஆகியோரிடம் இந்த நூல்கள் கைளிக்கப்பட்டன.